Saturday, 25 September 2010

உயர் ஜாதியைச் சேர்ந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு வழங்கிய தலித் பெண்ணுக்கு அபராதம் ?


இந்தியாவில் உயர் ஜாதியைச் சேர்ந்த வீடொன்றில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு வழங்கிய தலித் பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து அபராதம் விதித்துள்ளது.

தீண்டத்தகாத கீழ் பெண் ஒருவர், உயர் ஜாதியைச் சேர்ந்த வீடோன்றின் நாய்க்கு உணவு வழங்கியதாகவும், இதனால் அந்தப் பெண்ணுக்கு 15,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்

Friday, 24 September 2010

வீட்டு நூலகம்


எனக்கு அன்று நான்கு வயது இருக்கும். திடீரென்று ஒரு வாசனை வந்தது. இந்த வாசனை எங்கிருந்து வருகிறது? அப்பா திறந்த அலமாரியிலிருந்து வருகிறது.

அலமாரியில் என்ன இருக்கிறது?
- அலமாரியின் தட்டுகளிலெல்லாம் எவையோ அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன!
- ‘அது என்ன அப்பா?’ ஆர்வத்தை அடக்க முடியாமல் நான் கேட்டேன்.
- ‘பொக்கிஷம் மகனே’ அப்பா சொன்னார்.
- அது என்ன பொக்கிஷம்? அப்பா அடுக்கி வைத்திருக்கிற பொருட்களில் மேலும்

ஆபரேஷன் சிலந்தி!

மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நானோ. எதையும் மிகச்சிறிய அளவில் பயன்படுத்தி மிகப்பெரிய பயனைப் பெறுவது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பாகும். 

பல்வேறு துறைகளில் நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், மருத்துவ உலகில் அதன் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. சவாலான ஆபரேஷன்களில் பயன்படும் புதுமையான நானோ ரோபோ தற்போது வடிவமைக்கப்பட்டு உள்ளது.




சிலந்தி வடிவில் இந்த ரோபோ உள்ளது. மனிதனின் தலைமுடி தடிமனைவிட ஒரு லட்சம் மடங்கு சிறியது இந்த ரோபோ சிலந்தி. கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிலந்தி ரோபோவை உருவாக்கி உள்ளனர். மேலும்

Wednesday, 22 September 2010

நலம் காட்டும் கடிகாரம்! ஹஎன்ன நல்லா இருக்கீங்களா?

இப்படி நலம் விசாரிப்பது நமது பண்பாடு. இனி யாரும் உங்களை இப்படிக் கேட்டால் நீங்கள் மணி பார்ப்பதுபோல் கடிகாரத்தைப் பார்த்து ஹநலமாகத்தான் இருக்கிறேன்’ என்று பதில் சொல்லலாம். ஆமாம் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்பதைக் காட்டும் கடிகாரம் வந்துவிட்டது.
 

ஐரோப்பிய ஆய்வுக்குழு ஒன்று நவீன கைக்கடிகாரம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதில் எலக்ட்ரானிக் பாலிமர் மற்றும் நவீன சென்சார் இருக்கும். இதை வழக்கமான கடிகாரம்  மேலும்

‘எனது செல்வத்தை என் பிள்ளைகளிடம் ஒப்படைப்பது சிறந்த யோசனையல்ல’ பில்கேட்ஸ்!


‘எனது செல்வத்தை என் பிள்ளைகளிடம் ஒப்படைப்பது சிறந்த யோசனையல்ல’வென கணனி மென்பொருள் துறையில் சாதனை படைத்து உலகின் மிகப் பெரும் செல்வந்தராகியுள்ள பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

 
அதுமட்டுமல்லாமல பில்கேட்ஸும் அவரது மனைவியும் தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட தொண்டு ஸ்தாபனத்தின் மூலம் ஏழை நாடுகளைச் சேர்ந்த 250 மில்லியனுக்கும்  மேலும்

இந்தி நடிகர் விவேக் ஓபராய் ஐந்துகோடி ரூபாயில் புனரமைப்பதாக வாக்குறுதி அளித்த பாடசாலை கேட்பாரற்று கூரைகள் இன்றி கிடக்கிறது – ஆனந்தன் குற்றச்சாட்டு


கடந்த ஜுன்மாதம் மாறாவிலுப்பைப் பாடசாலைக்கு அரசாங்கம் இந்தியாவிலிருந்து வருகைதந்த இந்தி நடிகர் விவேக் ஓபராயை அழைத்துவந்து காண்பித்தது. அவரும் இப்பாடசாலையைத் தத்து எடுத்து ஐந்துகோடி ரூபாய் செலவில் இப்பாடசாலையைப் புனரழைப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டுச் சென்றார்.
 அவர் பொறுப்பேற்றுக்கொண்டதால் இன்று இப்பாடசாலையை ஒருவரும் திரும்பிப் பார்ப்பதில்லை. மேலும்

Tuesday, 21 September 2010

நயன்தாரா படம் நீதிமன்றம் தடை உத்தரவு

நயன்தாரா நடித்துள்ள மலையாள படம் ‘எலெக்ட்ரா’. இதில் நயன்தாராவின் அம்மா – அப்பாவாக மனிஷா கொய்ராலா&பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர்.



 ஷியாம் பிரசாத் இயக்கியுள்ளார். இம்மாதம் படம் ரிலீசாக இருந¢தது. இதற்கிடையே திடீரென இப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்துள்ளது எர்ணாகுளம் முன்சீப் கோர்ட். மேலும்

படமாகும் சல்மான்கான் கதை




பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் சல்மான் கான். 

அவரது கதையை இந்தியில் தயாரிக்கிறார் பி.கே. கிருஷ்ணன். 

இப்படத்துக்கு அண்ணா சல்மான் என தலைப்பிட்டுள்ளார். 

இதில் சல்மான் வேடத்தில் நடிக்கும் ஹீரோவுக்கான தேர்வு நடக்கிறது. மேலும்

Monday, 20 September 2010

இலங்கையில் இரண்டு வல்லரசு நாடுகளுக்கிடையில் நடைபெறும் போட்டியின் வெளிப்பாடே மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு

இலங்கையில் இரண்டு வல்லரசு நாடுகளுக்கிடையில் நடைபெறும் போட்டியின் வெளிப்பாடே மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவமாகுமென மக்கள் சந்தேகிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.



 


மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே சந்திரசேகரன் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும்

முரளியின் 100வதும் இறுதியுமான படம்!



ஸ்ரீ நந்தீஸ்வரர் மூவிஸ் சார்பில் சம்பத்குமார் தயாரிக்கும் படம், ‘கவசம்’. 

இதில் முரளி, சரவணன், சாய், ராஜா சந்துரு, லக்ஷனா, பிருந்தா நடித்துள்ளனர். 

எம்.எஸ்.மணிமாறன் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.  மேலும்

Sunday, 19 September 2010

அமெரிக்காவின் அப்பிள் நிறுவனம் புதிய கையடக்க கணனியை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஐபேட் எனப்படும் இந்தப் புதிய கணனியை அறிமுகப்புடுத்தியுள்ள அப்பிள் நிறுவனம் நேற்று முதல் விற்பனைக்கு விடப்பட்டு ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட்களை விற்று சாதனை படைத்துள்ளது.

ஏற்கெனவே அப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும்

வீட்டு நூலகம்


எனக்கு அன்று நான்கு வயது இருக்கும். திடீரென்று ஒரு வாசனை வந்தது. இந்த வாசனை எங்கிருந்து வருகிறது? அப்பா திறந்த அலமாரியிலிருந்து வருகிறது.

அலமாரியில் என்ன இருக்கிறது?
- அலமாரியின் தட்டுகளிலெல்லாம் எவையோ அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன!
- ‘அது என்ன அப்பா?’ ஆர்வத்தை அடக்க முடியாமல் நான் கேட்டேன்.
- ‘பொக்கிஷம் மகனே’ அப்பா சொன்னார். மேலும்

ஸ்டெதஸ்கோப் வேண்டாம் – ஐ-போன் மட்டுமே போதும்!

டாக்டருக்கான பிரதான அடையாளம் வெள்ளை கோட் மற்றும் கழுத்தில் தொங்கும் ஸ்டெதஸ்கோப். இந்த 2-வது அடையாளம் மாறப்போகிறது. அதற்கு பதிலாக ஐபோனும் கையுமாக இனி டாக்டர்களை பார்க்கலாம். இன்டர்நெட், இ-மெயில், பேக்ஸ் அனுப்பும் வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது.
 

இத்தகைய போன்களை மருத்துவ துறையில் பயன்படுத்துவது தொடர்பாக லண்டன் பல்கலைக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பீட்டர் பென்ட்லி தலைமையில் ஆய்வு நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். ஸ்டெதஸ்கோப்பாக பயன்படும் ஐபோனுக்கு ஐரூஸ்டெதஸ்கோப்’என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும்

Saturday, 18 September 2010

அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல்களும் தகர்வும் விமானத் தாக்குதல்களால் நிகழ்ந்தவை அல்ல – புதிய ஆய்வு கூறுகிறது:‐


2001ஆம் ஆண்டு செப்ரம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் விமானத் தாக்குதல்களால் நிகழ்ந்தவை அல்லவென புதிய ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
 

இச் சம்பவம் நடந்து ஒன்பதாவது ஆண்டு கடந்து விட்ட நிலையில் நியூயார்க் வர்த்தக மையம் விமானங்களால் தாக்கப்பட்டது என்பது பொய்யான தகவல் என ஆர்கிடெக்ட்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் For 9/11 ட்ரூத் எனும் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பு 600 கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியியலாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. மேலும்
 

ஈயும் சிங்கமும்


ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அந்த சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு ஈ வாழ்ந்து வந்தது. அந்த ஈ, ‘நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. 
நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது. இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது’ என்று நினைத்துக் கொண்டிருந்தது.
ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். ஈ இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது ஈ-க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது: மேலும்

“பாஸ்” ராஜேஷின் இயக்கத்தில் விரைவில் சூர்யா





பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற சூப்பர் காமெடி படத்தை தந்த இயக்குர் ராஜேஸ் இவருக்கு விரைவில் சூர்யாவை இயக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிவா மனசுல சக்தி’ படத்தை அடுத்து ராஜேஷ் இயக்கியுள்ள படம் ‘பாஸ் (எ) பாஸ்கரன்’. இரண்டுமே காதல் கலந்த காமெடி கதைகள், இரண்டுமே வெற்றிப்படங்கள்.

இது பற்றி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ பட ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் கூறும்போது, ‘ராஜேஷுக்குள் ஆக்ஷன் இயக்குனர் ஒளிந்திருக்கிறார். மேலும்

Friday, 17 September 2010

விஜய் நடிக்கும் பொலிஸ் படம்.



விஜய் நடிக்கும் 51-வது படத்திற்கு காவல்காரன், காவல் காதல் என்று பலவிதமான தலைப்புகள் யூகங்களாக வந்தன. தீவிர பரிசீலனைக்குப் பின் இப்போது காவலன் என்கிற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இருந்தாலும் இது பொலிஸ் கதையல்ல. ஏனோ விஜய்க்கும் பொலிஸ் டிரஸ்க்கும் அவ்வளவு பொருத்தமில்லை.  இருந்தும், விஜய் ஒரு படத்தில் முழு நீள பொலிஸாக நடிக்க இருக்கிறார். மேலும்

‐மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் வளாகத்தில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் 60க்கும் மேற்பட்டோர் பலி பலர் காயம்



 மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் வளாகத்தில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு சீனர்கள் மற்றும் பொலிஸார் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. 50ற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Video Attached


மேலும்

Thursday, 16 September 2010

தேசிய விருது பெற்ற பாண்டிராஜன் எமது இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி!



நேற்றயதினம் இந்திய திரையுலகின் மிகஉயரிய விருதான தேசியவிருது பெறுபவர்களின் விபரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இம்முறையும் தமிழ் திரையுலகம் சபர்பாக நான்கு விருதுகள் கிடைக்கப்பட்டிருக்கின்றன.

அதிலும் குறிப்பாக பாண்டிராஜனின் இயக்கத்தில் வெளிவந்த "பசங்க" திரைப்படம் மூன்று விருதுகளைப்பெற்றிருக்கின்றது.

2009ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படமாக "பசங்க" திரைப்படம் ஒரு விருதினையும், இத்திரைப்படத்தில் முதல் நிலை கதாபாத்திரங்களில் நடித்த அன்புக்கரசு மற்றும் ஜீவா ஆகியோர் சிறந்க குளந்தை நட்சத்திரங்களாகவும், சிறந்த வசனகர்த்தாவாக இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதிய பாண்டிராஜனும் தேசிய விருதினை பெற்றிருக்கின்றார்கள்.

இவ்வாறாக தனது படைப்பின் மூலம் தமிழ் திரையுலகினை பெருமைப்படுத்திய பாண்டிராஜன் எமது இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தனது "பசங்க" திரைப்படம் வழர்ந்த விதம் பற்றி விரிவாக செல்லியிருக்கிறார்.

அது மட்டுமன்றி இலங்கை பற்றியதான தனது நிலைப்பாட்டினையும் மனம் திறந்து பேசியிருக்கிறார். அந்த சுவாரஸ்யமான நேர்கானலை இங்கே அழுத்தி நீங்கள் காணலாம்.

அர்ஜீன் 5 வேடங்களில் நடிக்கும் “வல்லக்கோட்டை”



அர்ஜுன் நடிக்கும் ‘வல்லக்கோட்டை’ படத்தை இயக்கி வருகிறார் அதிரடி இயக்குனர் வெங்கடேஷ்.  இந்தப்படத்தில் 5 கெட்டப்பில் நடிக்கிறாறாம் அர்ஜுன்.
கறுப்பான தொழிலாளி வேடம் முக்கியமாம். ‘தசாவதாரம்’ படத்தில் கமல்ஹாசன் கறுப்பு நிற கெட்அப்பில் நடித்திருப்பார். அது போல இந்த வேடமும் முக்கியமானதாக இருக்குமாம். மேலும்

வருகிறது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9


வரும் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 9ன் சோதனைத் தொகுப்பு வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. அதிகம் பேர் இந்த தொகுப்பைப் பயன்படுத்தத் தொடங்கு கையில், மைக்ரோசாப்ட் தரும் பிங் தேடல் சாதனத்தினையும் அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள்.
 

அதனால், தேடல் வகை வருமானம் அதிகமாகும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. மேலும்

Wednesday, 15 September 2010

எதிரொலி


ஒரு ஓடையை அடைந்தாள். அவள் தண்ணீர் குடிப்பதற்காக குனிந்தாள். பழம் பட்டுக் கறையான அவளது முகம் தண்ணீரில் பிரதிபலித்தது. அவள் தண்ணீரில் தெரிந்த தன் முகக் கறையைப் பார்த்துக் கத்தினாள்:

‘அசிங்கம்!’
உடனே, ‘அசிங்கம்!’ என்ற எதிரொலி கேட்டது.
மீனா கேட்டாள், ‘ஏய்… யார் நீ?’
எதிரொலியும், ‘ஏய்… யார் நீ?’ என்று கேட்டது.
‘நான்தான் மீனா!’ என்று கத்தினாள் அவள்.
எதிரொலி, ‘நான்தான் மீனா!’ என்று சொன்னது.

80% முடிந்துவிட்ட காவலன் !




விஜய் நடிக்கும் காலவன் படம் 80 வீதமான காட்சிகள் முடிவடைந்துவிட்டனவாம். மீதமிருக்கும் காட்சிகளை கேரளா ஐரோப்பா ஆகிய நாடுகளில் படமாக்க இருக்கின்றனராம். 

 முக்கிய வேடங்களில் ராஜ்கிரண்இ வடிவேலு, ரோஜாஇ லிவிங்ஸ்டன், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி நடிக்கின்றனர். 

ஒளிப்பதிவுஇ என்.கே.ஏகாம்பரம். வசனம், குருவரன். இசை, வித்யாசாகர். பாடல்கள்: பா.விஜய், யுகபாரதி, கபிலன், விவேகா. மேலும்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நந்திக்கடல் பிரதேசத்தில் நாமல் ராஜபக்சவுடன் சிறீரங்கா‐

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா, ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஸவுடன் இணைந்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் இடத்திற்கு சென்றுள்ளார்.
 
 
முல்லைத்தீவு நந்திகடல் பிரதேசத்தில் கடந்த வருடம் மே மாதம் புலிகளின்  பிரபாகரன், கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. மேலும்

கருந்துளை சிக்கியது

முதன் முறையாக ஒரு கருந்துளையின் இருப்பிடம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை கருந்துளை கற்பனைப் பொருளாகவும் கருத்தளவில் மட்டுமே நிரூபிக்கப்பட்டதாவும் இருந்தது.


 
பூமிக்கு மிக அருகில் (பயப்பட வேண்டாம்) 7800 ஒளியாண்டுகளுக்கு அப்பால் சிக்னஸ் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ப்லெக் ஹோல் பக்கத்திலிருக்கும் ஒரு அப்பாவி நட்சத்திரத்தின் புற அடுக்கு வாயுவை அந்த கருந்துளையானது உறிஞ்சிக் கொண்டிருப்பது தெரிந்தது. மேலும்

அக்டோபரில் வெளியாகுமா எந்திரன்?


‘எந்திரன் படம் விரைவில் வரும் என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்களே தவிர, என்ன தேதி என்று மட்டும் சொல்ல மாட்டேங்குறாங்களே’, என ரஜினி ரசிகர்கள்  கட்டுப்படுத்த முடியாத ஆர்வத்துடன் சலித்துக் கொள்கிறார்கள்.

இப்போது அவர்களின் சலிப்பை களிப்பாக்கும் விதத்தில் அக்டோபர் 1-ம் தேதி எந்திரனை உலகம் முழுக்க வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மேலும்

Tuesday, 14 September 2010

சேரன் தயாரிக்கும் முரண்

ராஜன் மாதவ் இயக்க, இயக்குனர் சேரனின் ட்ரீம் தியேட்டர்ஸ் தயாரிக்கும் படம் ‘முரண்’.  சேரன், 
பிரசன்னா, ஹரிப்ரியா, நிகிதா, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.


 இவர்கள் உட்பட முரண்பட்ட 6 பேரின் கதைதான் இது. ஒரு வரியில் இப்படி கதையை சொல்லிவிட்டாலும் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். த்ரில்லர் கதை. 


இதுவரை படங்களில் பார்த்திருக்கிற சேரனும் பிரசன்னாவும் இதில் வேறுவிதமாக தெரிவார்கள். 
மேலும் 

Saturday, 11 September 2010

வம்சம் உருவானது எப்படி? சுனேனா மலர்விழி ஆனது எப்படி? - கலைஞன்


கலைஞன் GTN TV இன் புத்தம் புதிய கலைப்படைப்பு இன்றிலிருந்து ஆரம்பமாகி இருக்கின்றது. 

பலவேறு பட்ட கோணங்களில் திரைக்கலைஞர்களை நேர்காணும் இந்தப் புதுமரத்தில் முதன்முதலாக பூத்திருப்பவர் பசங்க புகழ் பாண்டியராஜ்.

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரையில் நீண்ட இடைவெளிக்குப் பிற்பாடாக சிறுவர் படைப்பொன்றைத் தந்த பெருமை பாண்டிராஜைத் தான் சேரும்.

 ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒவ்வொரு படைப்பிற்கும் உயிர் கொடுப்பதற்கு வித்தியாசம் வித்தியாசமகன உந்து சக்தி இருக்கும். 



பாண்டிராஜைப் பொறுத்த வரையிலும் பலவேறுபட்ட தன்னுடைய சூழல்களை வைத்து அற்புதமான இரண்டு திரைக்கதைகளை உருவாக்கி இருந்தார். முதலாவது பசங்க, நடிகர்களின் இயல்பான நடிப்பின் வெற்றிநடை போட்ட திரைப்படம். இரண்டாவது வம்சம். 

பாண்டிராஜைப் பொறுத்த வரையில் வம்சம் திரைக்கதையை எவ்வாறு வடிவமைத்தார்?  அருள் நிதி, சுனேனா போன்றவர்களைப் பாத்திரத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு வடிவமைத்தார். அறிய உங்களுக்கும் ஆர்வம் இருக்கும் இல்லையா? கலைஞனில் இயக்குனர் பாண்டிராஜின் நேர்காணலைக் காண....!

Friday, 10 September 2010

திடமாக கை குலுக்குபவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்கள் – ஆய்வு


திடமாக கை குலுக்குபவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்கள் என அண்மைய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
ஒருவர் எவ்வாறு கை குலுக்குகின்றார் என்பதன் அடிப்படையில் அவரது ஆயுளை நிர்ணயிக்க முடியும் என லண்டன் கல்லூரி விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும்