Tuesday, 31 August 2010

புள்ளிமான் கதை


ஒரு காட்​டில் இரண்டு புள்ளி மான்கள் இருந்தன. பார்ப்பதற்கு இரண்​டும் ஒரே மாதிரி​யாக இருக்​கும். இணை பிரி​யாத நண்பர்க​ளாக இருந்தன. சேர்ந்தே சாப்பி​டும். எங்கு சென்றா​லும் சேர்ந்தே​தான் செல்​லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்க​ளால் விளை​யாட முடிய​வில்லை. மழை நின்ற பிறகு​தான் வெளியே செல்ல முடிந்தது. இன்​னும் மழை பெய்​யுமா என்று இரண்டு மான்க​ளும் மேலே பார்த்தன. அப்போது​தான் மேகத்​திற்​குள்ளி​ருந்து வெளியே வந்தது சூரியன்.
அப் ​போது மான்கள் இரண்​டும் சூரிய​னைப் பார்த்து, ‘சூரியனே, இன்​னும் மழை வருமா?’ என்று கேட்டன. அதற்கு சூரியன், ‘அது​தான் நானே வந்து​விட்​டேனே, இனி எப்படி மழை வரும்?’ என்றது.
பிறகு, சூரியன் மான்க​ளைப் பார்த்து சிரித்தது.
ஒரு மான் கேட்டது, ‘எங்க​ளைப் பார்த்து ஏன் சிரிக்கி​றாய் சூரியனே?’
‘நீங்கள் இருவ​ரும் ஒரே மாதிரி​யாக இருக்கி​றீர்கள்! அது​தான் எனக்​குச் சிரிப்பு வந்து​விட்டது! தவ​றாக எடுத்​துக்​கொள்​ளா​தீர்கள். நீங்கள் யார்?’
‘நாங்கள் ​தான் அழ​கான இரண்டு புள்ளி மான்​கள். நாங்கள் இருவ​ரும் நண்பர்கள். நாங்கள் எப்போ​தும் ஒற்றுமையாகத்​தான் இருப்​போம்’ என்றன புள்ளி மான்கள்.
சூரியன் கேட்டது: ‘மிக​வும் நல்​லது! உங்க​ளில் யார் திறமை மிக்கவர்கள்?’

No comments:

Post a Comment