Wednesday, 18 August 2010
இலங்கை வீரர்கள் எப்போதுமே நாகரீகம் தெரியாதவர்கள் – கங்குலி
இலங்கை வீரர்களுக்கு ஆடுகளத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாகரீகம் தெரியாது. என்று முன்னாள் இந்திய அணியின் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்;.
முத்தரப்பு கிரிக்கெட்டில் இந்தியா இலங்கை இடையே நடந்த போட்டியில் சேவாக்கை சதம் அடிக்க விடாமல் ரன்தீவ் நோ பால் வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இலங்கை வீரர் தில்ஸ்ஸான், ரன்தீவிடம் நோபால் போட சொன்னது ஸ்டம்புக்கு கீழே உள்ள மைக்ரோ போன் மூலம் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் அணியின் தலைவர் என்ற முறையில் தான் பொறுப்பேற்பதாகவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று இலங்கை அணித் தலைவர்; சங்ககரா தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஒரு நோபால் கூட ரன்திவ் வீசவில்லை. நான் சதம் அடிப்பதை விரும்பாததால் வேண்டுமென்றே நோ பால் போட்டு வாய்ப்பை கெடுத்துவிட்டார் என்று சேவக் குற்றம் சாட்டினார். ரன்தீவின் இந்த செயலுக்கு முன்னாள் வீரர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் தலைவர்; சவுரவ் கங்குலி கூறியதாவது: விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம். முதலில் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை வீரர்கள் எப்போதுமே நாகரீகம் தெரியாதவர்கள். வெற்றி பெறும்போது ஆர்ப்பரிக்கும் அவர்கள் தோற்கும் நிலையில் இருந்தால், எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
சேவக் சதம் அடிக்கக்கூடாது என்று வேண்டுமென்றே நோபால் வீசி கிரிக்கெட்டை அவமதித்து விட்டார்கள். அணித் தலைவர்; மற்றும் சகவீரர்கள் சொல்லாமல் ரன்தீவ் அப்படி செய்திருக்க மாட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment