எட்டு வயதுக் குழந்தையாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்த பிராமி ஜெகனுக்கு இப்போது 30 வயது! இதில் ஆச்சர்யக் குறிக்கு என்ன வேலை என்கிறீர்களா? இந்தப் பெண்மணி இன்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், மேலவைக்கு (செனட்) போட்டியிடுகிறார்!
பொதுவாக, புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வரும் தமிழர்கள், அரசியல்
அமைப்புகளில் அதிகம் பங்கேற்பதில்லை. பொது அமைப்புகளில் பணியாற்ற விரும்பினால், தமிழ்ச் சங்கங்கள் அமைப்பார்கள்… கோயில் கட்டுவார்கள். அவ்வளவுதான் ஆனால், தமிழ்ப் பெண் ஒருவர், வெள்ளைக்காரர்கள் மட்டுமே போட்டியிடும் பொதுத் தேர்தலில், அவர்களுக்கு சமமாக அரசியல் களம் காண்பது ஆச்சர்யம்தானே!
‘கிரீன்ஸ் கட்சி’யின் சார்பாகப் போட்டியிடும் பிராமி ஜெகனின் தந்தை அருணாசலம் ஜெகன், சிவில் இன்ஜினீயர். அம்மா கிருஷ்ணா, ஆசிரியை. 1988-ம் ஆண்டு குடும்பத்துடன் ஆஸ்திரேலியா வந்தவர்கள். சிட்னியில் உள்ள நியூ சௌத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ‘இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ்’ பட்டப் படிப்பை முடித்து, மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ‘மெக்குவாரி வங்கி’யில் பணியில் சேர்ந்தார் பிராமி ஜெகன். பின்னர், உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜே.பி.மார்கனில்

No comments:
Post a Comment